Archives: மே 2020

ஏன் என்னை?

வித்தியாசமானவைகளைப் பற்றிக் கூறும் புத்தகத்தில், பத்து லட்சம் மக்களுக்கு ஒருவர் மின்னலால் தாக்கப் படுகின்றனர் என்றும், 25,000 பேருக்கு ஒருவர், தாங்கமுடியாத அதிர்ச்சி அல்லது இழப்பின் காரணமாக ஏற்படும் “உடைக்கப் பட்ட இருதயம்” என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் நோயால் பாதிக்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வித்தியாசமான பிரச்சனைகளால் ஏற்படும் அ     நுபவங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதப் பட்டுள்ளன. ஆனால் இதில் சம்பந்தப்பட்டவர் நாமாக இருந்தால், அதற்கான தீர்வு என்ன என்பதை குறித்து எதுவும் எழுதப் படவில்லை.

யோபு வித்தியாசமான யாவற்றிற்கும் சவாலாக காணப்படுகின்றான். தேவன் அவனைக் குறித்து, “உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை” (யோபு 1:8) என்றார். ஆனாலும் தொடர்ச்சியான, சவாலான இழப்புகளைச் சந்திக்கும்படி, யோபு தெரிந்து கொள்ளப் பட்டான் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிலும், யோபுவுக்கு பதிலைத் தெரிந்து கொள்ளும்படி கெஞ்சிக் கேட்பதற்கு காரணமிருக்கின்றது. “ஏன் என்னை” என்று புரிந்து கொள்ள முடியாமல், அவல நிலையில் போராடுவதை யோபு புத்தகத்தில் அதிகாரம், அதிகாரமாகக் காண்கின்றோம்.

சொல்ல முடியாத வேதனையும், தீமையும் நம்மைத்தாக்கும் போது, எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதற்கான வழியை, யோபின் கதை நமக்கு காட்டுகின்றது. தேவன், நற்குணத்திற்கும், இரக்கத்திற்கும் (அதி.25) மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகக் கூறும் ஒருவருடைய கஷ்டங்களையும் குழப்பங்களையும் விளக்கும் போது, விதைப்பையும் அறுப்பையும் (4:7-8) குறித்து நாம் கருதுகின்ற மாற்றமுடியாத சட்டத்திற்கும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம். சாத்தான் கொண்டு வருகின்ற குழப்பங்களுக்கெல்லாம் பின்கதையைத் தெரிந்து கொண்ட பின்பு (அதி.1), அதற்கு தேவன் தரும் பதிலையும் தெரிந்து கொண்ட பின்னர் (42:7-17), தேவன் ஒரு நாள் தன்னுடைய குமாரனை நம்முடைய பாவங்களை சுமக்கும்படி செய்வார் என்பதையும் தெரிந்து கொள்ளச் செய்கின்றார். யோபுவின் கதை, நமக்கு காண்பவைகளையல்ல, காணாதவற்றை விசுவாசித்து வாழும்படி கற்றுக் கொடுக்கின்றது.

தேனைக் காட்டிலும் இனிமையானது

அவருடைய பேச்சின் தலைப்பு இன அழுத்தம். ஆயினும் அவர் அமைதியாகவும், தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டும் இருந்தார். மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்பாக, மேடையில் நின்றவராய் தைரியமாகப் பேசினார், தாழ்மையோடும், கிருபையும் இரக்கமும் நிறை    ந்த வார்த்தைகளை நகைச் சுவையோடும் பேசினார். இறுக்கத்தில் இருந்த கூட்டத்தினர் தளர்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. விவாதத்திற்கு உரிய இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று குழப்பத்தில் இருந்த மக்கள், பேச்சாளரோடு சேர்ந்து சிரித்தனர், தங்களின் உணர்வுகளையும், வார்த்தைகளையும் அமைதிப் படுத்தினர். விரும்பத்தகாத ஒரு தலைப்பையும் எப்படி சமாளிப்பது என்பதைச் செயலில் காட்டினார்.

சாலமோன் ராஜாவும் இத்தகைய ஒரு அணுகு முறையையே ஆலோசனையாகத் தருகின்றார். “இனிய சொற்கள் தேன்கூடு போல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” (நீதி. 16:24) என்கின்றார். மேலும், “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை ஊட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்” என்றும் கூறுகின்றார் (வ.23).

சாலமோனைப் போன்ற ஒரு வல்லமையுள்ள அரசன், ஏன், எவ்வாறு பேசவேண்டும் என்பதை கூறத் தன் நேரத்தைச் செலவளிக்க வேண்டும்? ஏனெனில் வார்த்தை கொல்லக் கூடியது. மேலும் சாலமோன் அரசனின் காலத்தில், தங்களின் தேசத்தைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்ள, அரசன் செய்தியாளர்களையே சார்ந்திருக்க வேண்டியதாய் இருந்தது, ஆதலால், அமைதியும், நம்பகத்தன்மையும் உள்ள செய்தியாளர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. அவர்கள் விவேகமும் ஞானமும் நிறைந்த வார்த்கைகளை  உபயோகித்தனர், எத்தகைய காரியமாக இருந்தாலும் அதிக அலட்டலும், கடுமையான வார்த்தைகளும் அவர்களிடம் காணப்படவில்லை.

நம்முடைய கருத்துக்கள் கருணையோடும், நமது சிந்தனைகள் தேவனோடு இசைந்ததாகவும் விவேகமும், இனிமையும் நிறைந்ததாகவும் இருப்பின், அது நமக்கு நன்மையே பயக்கும். இதனையே சாலமோன் “மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்திரம் கர்த்தரால் வரும்” என்பதாகக் கூறுகின்றார் (வச. 1).

நினைவு கூர்ந்து

ஒரு நினைவு நாள் அன்று, இராணுவத்தில் பணிபுரிந்த அநேகரை நினைவுகூர்       ந்தேன், அதில் என்னுடைய தந்தையும் மாமாவும் அடங்குவர். இவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது, இராணுவத்தில் சேவை புரிந்தார்கள். இவர்கள் வீட்டிற்குத் திரும்பியவர்கள். ஆனால் இந்த யுத்தத்தில், தங்களின் தேசத்திற்காக, ஆயிரக் கணக்கானோர் தங்கள் அன்பிற்குரியவர்களைப் பரிதாபமாக இழந்தனர். என்னுடைய தந்தையும், அந்த நாட்களில் இருந்த அநேக இராணுவ வீரர்களும், தாங்கள் நேசிப்பவர்களைப் பாதுகாக்கவும், தாங்கள் சரியென நினைக்கும் காரியத்தில் உறுதியாக நிற்பதற்காகவும் தங்கள் உயிரையும் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

தங்களின் நாட்டைப் பாதுகாப்பதற்காக யாரேனும் மரித்தால், அவருடைய தியாகத்தைக் கனப்படுத்துபடி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை” (யோவான்15:13) என்ற வாசகம், அவருடைய அடக்க ஆராதனையின் போது வாசிக்கப் படும். ஆனால் இந்த வாசகத்தின் பின்னணி என்ன?

இயேசு மரிப்பதற்கு முன்பாக, கடைசி இராப் போஜனத்தின் போது, தன்னுடைய சீஷர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். இவர்கள் ஒரு சிறிய கூட்டமான சீஷர்கள், அதிலும் யூதாஸ், நம்பிக்கை துரோகம் செய்யும் படி, அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டான் (13:18-30). எல்லாவற்றையும் தேவன் அறிவார், ஆயினும், தன் நண்பர்களுக்காகவும், துரோகிகளுக்காகவும் கிறிஸ்து தன்னுடைய ஜீவனை தியாகம் பண்ணும்படி தெரிந்து கொண்டார்.

இன்னும் அவருக்கு எதிரிகளாக இருக்கின்றவர்களும் (ரோமர் 5:10), ஒரு நாள் அவர் பேரில் விசுவாசம் வைப்பார்கள், என்பதால் அவர்களுக்காகவும் மனப்பூர்வமாக தன் ஜீவனைக் கொடுக்க ஆயத்தமாக இருந்தார். அதற்குப் பதிலாக, அவர் எல்லாரையும் நேசித்தது போல “ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்” என்று அவர் தன் சீஷர்களிடம் (அப்பொழுதும், இப்பொழுதும்) கேட்கின்றார் (யோவா.15:12). அவருடைய மிகப் பெரிய அன்பு, நம்மையும் நம்முடைய நண்பர்களையும், எதிரிகளையும், தியாகத்தோடு அன்பு கூர கட்டாயப் படுத்துகின்றது.

பேசும் மேசைகள்

தனிமை என்ற உணர்வு, நம்முடைய நலமான உணர்வுகளை அச்சுறுத்தக் கூடிய மிகப் பெரிய தீமையாகும். இது, சமுதாய ஊடகங்களில் நம்முடைய நடத்தை, நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் இது போன்றவற்றைப் பாதிப்பதின் மூலம் நம் உடல் நலத்தைப் பாதிக்கின்றது. உலக மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பேர், வயது, பாலினத்தைச் சாராமல், ஏதாவது சில நேரங்களிலாவது தனிமையை உணர்கின்றனர். பிரிட்டனிலுள்ள ஒரு பெரிய அங்காடியில் “பேசும் மேசைகளை”, அவர்களின் சிற்றுண்டிச் சாலைகளில், மக்களிடையே உறவுகளை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கியுள்ளனர். மனிதர்களோடு உறவாட விரும்புகின்றவர்கள், இத்தகைய நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள  மேசைகளில் அமர்ந்திருப்பவரோடு இணைந்து கொள்வர் அல்லது அங்கு அமர்வதன் மூலம், தங்களின் விருப்பத்தை மற்றவர்களுக்குத் தெரிவிப்பர். உரையாடல்கள், அவர்களுக்கு மற்றவர்களோடு தொடர்பையும் சமுதாய உணர்வையும் தருகின்றது.

ஆதி திருச்சபைகள், மக்களுக்கு பிறரோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. விசுவாச வாழ்க்கையைப் புதியதாகப் பார்க்கும் உலகில், ஒருவரோடொருவர் தொடர்பற்று வாழும் போது, தங்களின் விசுவாச வாழ்க்கையில் ஒரு தனிமையை உணர்கின்றனர். “அவர்கள் அபோஸ்தலருடைய உபதேசத்திலும்” பங்கு பெற்று, இயேசுவைப் பின்பற்ற தேவையான காரியங்களைக் கற்றுக் கொண்டனர், அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திரு     ந்து, வீடுகள் தோறும் அப்பம் பிட்டு” ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி, ஐக்கியத்தில் நிலைத்திருந்தார்கள் (அப். 2:42,46).

நம் அனைவருக்குமே மனிதர்களின் தொடர்பு தேவை. தேவன் அதற்கென்றே நம்மை உருவாக்கினார்! வேதனை நிறைந்த தனிமை, நம்மைத் இத்தேவைக்கு நேராக வழிநடத்துகின்றது. ஆதி திருச்சபை மக்களைப் போல நாமும் நல்லெண்ணமுடன், மனித தோழமையை ஏற்படுத்துவோம், இத்தேவையோடு இருக்கும் நம் சுற்றத்தாருக்கும் வழங்குவோம்.

தீபத்தைக் காப்பவர்

அவர்களை “ஒளியைப் பாதுகாப்பவர்” என்று அழைத்தனர். அமெரிக்கா தேசத்தில், வடக்கு கரோலினாவின் கடற்கரையில் அமைந்துள்ள ஹட்டெராஸ் தீவுகளின் முனையிலுள்ள கலங்கரை விளக்கத்தில், 1803 ஆம் ஆண்டிலிரு  ந்து, அந்த விளக்கு மையத்தை பராமரித்து வந்தவர்களுக்காக, ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. தற்சமயம், கடற்கரை அரிப்பு காரணமாக, அந்த முழு அமைப்பும் உள்பகுதிக்கு மாற்றப் பட்டுள்ளது. விளக்கு பாதுகாப்பவர்களின் பெயர்கள், பழைய அஸ்திபார கற்களில் பதிக்கப்பட்டு, புதிய கட்டடத்திலுள்ள ஓர் அறைவட்ட வடிவ அரங்கில், பார்வையாளர்கள் பார்க்கும்படி வைக்கப் பட்டுள்ளது. இன்றைய பார்வையாளர்கள் அந்த சரித்திரம் படைத்த விளக்கு பாதுகாவலர்களின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி, இந்த கலங்கரை விளக்கின் மீதும் “கவனம் செலுத்தவும்” என்று அங்கே வைக்கப் பட்டுள்ள தகடுகளில் எழுதப் பட்டுள்ளது.

மெய்யான ஒளியைத் தருபவர் இயேசு கிறிஸ்து. அவர், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” (யோ.8:12) என்றார். இது யாவரும் பெற்றுக் கொள்ளக் கூடிய மிக முக்கியமான ஒன்று. ஒளியைப் படைத்தவரும், ஜீவனைத்தருபவரும், தன்னை இவ்வுலகிற்கு அனுப்பினவருமாகிய பரலோகத் தந்தைக்கும் தனக்கும் உள்ள உறவை உறுதிபடுத்தவே இயேசு இதனைக் கூறினார்.

நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய போதனைகளை கடைபிடித்தால், நாமும் தேவனோடுள்ள உறவைப் புதுப்பித்துக் கொள்கின்றோம், அவர் நமக்கு புதிய வல்லமையையும், நோக்கத்தையும் தருகின்றார். வாழ்வை மாற்றும் அவருடைய அன்பு “மனுஷருக்கு ஒளியாயிருந்து” (யோவா. 1:4), நம்மைப் பிரகாசிக்கச் செய்து, நம் மூலம் இருளும், ஆபத்தும் நிரம்பிய உலகில் பிரகாசிக்கின்றது.

இயேசுவைப் பின்பற்றும் நாம், “ஒளியைப் பாதுகாப்பவர்கள்”. நம்மில் அவருடைய ஒளி பிரகாசிப்பதை பிறர் காணட்டும், ஜீவனையும் நம்பிக்கையையும் தருபவர் அவர் ஒருவரே என்பதை அவர்களும் கண்டுபிடிக்கட்டும்!